×

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பொன்னேரி: மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள சகாய மாதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் அற்புத திரேஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு, 264 விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் மணவாளன், அரவிந்த் மீஞ்சூர் பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் ஜெயச்சந்திரன், வித்யாவதி தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ்செல்வம், சம்சுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சமீமா ரகீம், கீதா, கவுன்சிலர்கள் கோல்டு மணி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 219 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலை பள்ளி சேர்ந்த 233 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

The post மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tamil Nadu government ,Sagaya Mata Girls High School ,Meenjoor Regional Development ,Office ,Meenjoor Municipal Council ,Rukumani Mohanraj ,
× RELATED பழவேற்காடு கடற்கரையில் தேங்கியுள்ள...